Rohith : சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் விடுவிக்கப்பட்டுளார் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஹானே தலைமயிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. மே.தீ., அணிகளுடனான போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய ‘ஏ’ அணியில் சேர்ந்து 4 நாள் கொண்ட போட்டிகளில் பங்குபெறுவார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதால் ஓய்யு அவசியமாகின்றதை நினைவில் வைத்தும் சரவதே போட்டிகளில் ரோகித்தின் முக்கியதுவத்தை கருதி இப்பொழுது ஓய்யு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வாரியம் ரோகித்தை இந்திய ‘ஏ’ அணியில் இருந்து விடுவித்தது.
நாளை மறுதினம் இந்திய அணியுடன் ரோகித் சர்மாவும் ஆஸ்., க்கு கிளம்ப உள்ளதாக கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.