IND vs AUS 3rd Test Day 4 – மெல்போர்னில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்., அணிக்கு 399 ரன் இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் எடுத்து வெற்றுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து “டிக்ளர்” செய்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்., அணி அடுத்து அடுத்து விக்கெட் இழந்தது தடுமாறியது. இந்திய அணி பந்து வீச்சாளர் பும்பர 33 ரன் மட்டுமே கொடுத்தார். மற்றும் 6 விக்கெட் கைப்பற்றினார்.
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-வது இன்னிங்கசை விளையாட முடிவெடுத்தது.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியா அணிக்கு சரியாக அமையவில்லை. 106 ரன்களில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
மொத்தமாக 399 ரன் வெற்றி இலக்காக ஆஸ்., அணிக்கு இருந்தது. ஆஸ்., அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடினர்.
பிறகு, இந்திய அணியின் பந்து வீச்சில் ஆஸ்., அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 242 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து அடுத்து பந்து வீசிய இந்திய அணியின் வீரர் பொறுப்புடன் விளையாட விக்கெட்களை இழந்தது.
நிதானமாக விளையாடிய கம்மின்ஸ் அரை சதம் அடித்தார்.
அவரும் 61 ரன் எடுத்து இருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை கடைசி நாள் போட்டி நடைபெற உள்ளது.