தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Important Announcement on TN Schools Opening : இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் என பொது இடங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் இதே நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும் 14 டிவி சேனல்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தும் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.