ராஜு டைட்டிலை வென்றதை பார்க்க ஏன் வரவில்லை என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
Imman Annachi About BB5 Grand Finale : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆக ராஜு வெற்றி பெற்றதாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் அறிவித்தார். மேலும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD
இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் பங்கேற்றனர் ஆனால் இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என இமான் அண்ணாச்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது நான் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். பொங்கலுக்கு வீட்டிற்குக் கூட போக முடியவில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் பினாலே பங்கேற்க ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் தனிமையில் இருக்க முடியவில்லை. ஆகையால் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
ராஜ் தான் டைட்டிலை வென்றார் என கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் வெற்றியைக் கண்டு சந்தோஷப்பட்ட முதல் ஆள் நான்தான் என கூறியுள்ளார்.