தனது குரல் வளத்தால் பலரையும் கவர்ந்த மாற்றுத்திறனாளி பாடகரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Iman took selfie with singer pic goes viral – இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் தந்தை-மகள் பாசத்தை விளக்கும் ‘கண்ணானே கண்ணே’ பாடல் பலரையும் கலங்க வைத்த பாடலாகும். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
ஒரு நாளைக்கு 3 செல்போன்… வார சம்பளம் ரூ.5 ஆயிரம்… எப்டிலாம் திருடுறாய்ங்க பார்த்தீங்களா?
இப்பாடலை கண்பார்வை இல்லாத ஒருவர் அழகான குரலில் சிறப்பாக பாடும் வீடியோவை சிலநாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைக்கண்ட டி.இமான் அந்த நபரின் தொலைபேசி எண்களை கேட்டு டிவிட் செய்திருந்தார். அதன்பின் அந்த வீடியோ எடுத்தவரின் செல்போன் எண்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. எனவே, அந்த பாடகருக்கு டி.இமான் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.அந்த பாடகரின் பெயர் திருமூர்த்தி என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அவரை இமான் நேரில் அழைத்து பேசியுள்ளார். மேலும், அவருடன் ஒரு செல்பியும் எடுத்துள்ளார். அப்போது அங்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் அருகில் இருந்தனர். இதை பார்க்கும் போது விரைவில் திருமூர்த்தி இமானின் இசையில் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dear Online World! Kindly share this talent’s contact pls???? https://t.co/OVFLAe76CD
— D.IMMAN (@immancomposer) September 21, 2019