சீன பொருட்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆப்பிள் நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
I Phone 11 Made in Chennai : இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த தாக்குதலால் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட பல்வேறு செல்போன்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
மேலும் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியர்கள் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக சீன நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனை இந்தியாவில் எதிர்பாராத அளவாக சரிவை கண்டு வருகின்றன.
இதனால் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தன்னுடைய செல்போன் உற்பத்தியை மேட் இன் இந்தியா என்ற பெயரில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி உள்ளது.
மேலும் இந்தியாவில் தயாராகும் ஐ போன்களின் விலையும் சற்று குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உலகப் புகழ்பெற்ற ஐபோன் நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கி இருப்பது தமிழகத்தின் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.