பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
HSC Exam Results Details in Tamil Nadu : கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் மீதமிருந்த 11ஆம் வகுப்பின் சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.
மேலும் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
முதல்வருடன் ஆலோசித்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மேலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு இன்னும் நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.