Aruppu Kottai

Aruppu Kottai : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர், நாட்டு வைத்தியர் கோமாளி நாராயணன் (65).

அதே ஊரைச் சேர்ந்தவர், முத்துராஜ் மகன் பாலமுருகன் (19). நூர்பாலை தொழிலாளி.

இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போதிலும் காய்ச்சல் நின்றபாடில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் வைத்தியர் நாராயணனிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

அவர் காய்ச்சலை குணபடுத்துவதாக கூறி பாலமுருகன் உடைய உள்நாக்கை அறுத்துள்ளார். உடனே இரத்தம் பீறிட்டு கிளம்பியது, வலியால் பாலமுருகன் துடித்துள்ளார்.

இரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால், உடனடியாக பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

அங்கு பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, அவர்கள் அளித்த புகாரின் பேரில்,. அருப்புக்கோட்டை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, நாட்டு வைத்தியர் கோமாளி நாராயணன்- ஐ கைது செய்தனர்.

காய்ச்சலை குணப்படுத்துவதாக கூறி விட்டு வைத்தியர் வாலிபரின் நாக்கை அறுத்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.