Hockey World Cup 2018 – புவனேஸ்வர் : நேற்று நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜிய அணிகள் மோதினர். பரபரப்பாக இருந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டது.
14-வது உலக ஹாக்கி போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதினர். ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக நடந்து முடிந்தது.
இந்திய அணி தனது முதல் ஆட்டதை தென்னாப்பிரிக்காவுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மிகுந்த நம்பிக்கையுடன் பெல்ஜியதுடன் நேற்று மோதியது.
இரு அணிகளுமே ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் அடித்து புள்ளிகள் சேர்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.
பெருபாலன நேரங்களில் பந்து பெல்ஜிய அணிகளிடம் இருந்த போதும் இந்திய அணியின் சிறப்பான தடுப்பை எதிர்கொள்ள பெல்ஜிய அணி கடுமையாக போராட வேண்டியதாயிற்று .
மிகவும் போராடி பெல்ஜிய அணி வீரர் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, கோல் அடித்தார். அதுவரையில் இரு அணியும் தங்களின் கணக்கை தொடங்கமலே இருந்தது.
முதல் கோல் பெல்ஜிய அணி போட்டு கணக்கை தொடங்கியது. சுதாரித்து கொண்ட இந்திய அணி பெரிதும் முயன்றும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். இதன் நடுவில் கிடைத்த பெனால்டியை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கோல் அடித்தது.
தொடர்ந்து 46-வது நிமிடத்தில் இந்திய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அடுத்த 55-வது நிமிடத்தில் பெல்ஜிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது.
இதனால், இந்தியா மற்றும் பெல்ஜிய அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.