Hardik Pandya : இந்திய அணியில் இருந்து முன்னதாக நடந்து முடிந்த தொடர் ஒன்றில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தற்காலிகமாக ஓய்வு எடுத்திருந்தார் ஹர்திக் பாண்டியா.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது அவரில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.
அதற்கு பிறகு நடைபெற்ற எந்த தொடரிலும் அவர் பங்கு பெறவில்லை.
தற்போது நடக்கவிருக்கும் ஆஸ்.,அணிக்கு எதிரான தொடரிலும் பாண்டியா இடம் பெறவில்லை.
இந்திய அணியில் இளம் ஆல்-ரவுண்டர் பாண்டியா. இவர் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருப்பது சற்று சோகமானது என்றாலும் இந்திய அணியின் மற்ற பந்து வீச்சாளர்களும் சளித்தவர்கள் இல்லை என்பதால் இந்த ஆஸ்., உடனான போட்டியில் இந்திய அணி முழு உத்வேகத்துடன் செயல்படும் என்றே கூறப்படுகின்றது.
இப்பொழுது பாண்டியா சிகிச்சை பெற்று சற்றே உடல் நலம் பெற்று மீண்டும் தனது பவுலிங் பயிற்சியை துவங்கி இருக்கின்றார்.
தான் பயிற்சி பெரும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றார் பாணிடியா.
அதில் அவர் “ நான் 60 நாட்களுக்கு பிறகு பவுலிங் பயிற்சி எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது “ என்று தெரிவித்துள்ளார்.
Focused and determined! Feels good to be bowling after 60 days, on my road to recovery ???????????????? pic.twitter.com/D5moHZKVfd
— hardik pandya (@hardikpandya7) November 19, 2018