நடிகர் ஹிப் ஹாப் ஆதி பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் ஹிப்ஹாப். தனது பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்போது ஏ ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வீரன்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஃபேண்டசி, காமெடி, ஆக்சன் கலந்த ஜர்னரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. வரும் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் ஹிப்ஹாப் ஆதி அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து அளித்துள்ள பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “நான் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். நட்பே துணை படத்துக்காக விளையாட்டு கற்றேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் குதிரை ஏற பயிற்சி எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற படிக்கச் சென்றேன். என்று கூறியிருக்கிறார். இவரது இந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.