Heavy Rain : சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கடும்வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள்மாட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது , ‘கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள் முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
எனவே இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும், தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் அதிகபட்சமாக தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் இச்சமயத்தில் சில மாவட்டங்களில் மழை வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளதால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.