Heavy Rain in North Districts
Heavy Rain in North Districts

Heavy Rain in North Districts – சென்னை: தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் டிசம்.15 ,16- ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் 15, 16-ம் தேதிகளில் கூட தென்மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வீசிய கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியது.பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மேலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் அனைவரும் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில், வரும் 15,16 ஆம் தேதிகளில் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.