FEFSI தொழிலாளர்களுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
Harsih Kalyan Relief to FEFSI : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் சீசன் 1 மூலமாக மிகவும் பிரபலமானவர்களின் இவரும் ஒருவர்.
பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவரும் இவர் மட்டும் தான். தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்ய ப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் பெப்சி தொழிலார்களுக்காக ரூ 1 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார்.
சூர்யாவின் குடும்பம் ரூ 10 லட்சமும் சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரூ 50 லட்சமும் கொடுத்திருந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் ரூ 1 லட்சம் கொடுத்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகர் தான், இருந்தாலும் அவர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 1 லட்சம் உதவி செய்துள்ளது திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.