மோசடி வழக்கில் ஹரி நாடார் கைதானதை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நடிகைகளிடம் விசாரணை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hari Nadar Arrest Issue : கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் அரசியல், சினிமா என அனைத்திலும் பரபரப்பை கிளப்பியவர் ஹரி நாடார். உடல் முழுவதும் நகைகளை மாட்டிக்கொண்டு திரிந்தார். இதனால் இவர் மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரித்த போது பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.
இவரைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த மூன்று நடிகைகளை விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று நடிகைகள் ஸ்ரீ ரெட்டி, வனிதா விஜயகுமார் மற்றும் விஜயலட்சுமி என கூறப்படுகிறது.
இவர் தயாரித்து நடிக்கும் டுகே காதல் அழகானது என்ற படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.