விஜய்க்கு நிறைய கதை சொல்லி இருக்கேன் என அவருடன் இணைவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் ஹரி.
தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் இருப்பவர் ஹரி. பரபரப்பான திரைகதைகளுக்கு பஞ்சம் இல்லாத இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் கூட மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இயக்குனர் ஹரி தளபதி விஜயுடன் இணைவது குறித்து பேசி உள்ளார்.
அதாவது தளபதி விஜய் அவர்களை பல முறை சந்தித்துள்ளேன் அதற்கு பல கதைகளை கூறியும் உள்ளேன். ஆனால் அந்த கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. விஜய் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது வருங்காலத்தில் நிச்சயமாக அவரை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
ஹரி இவ்வாறு கூறியிருப்பதை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் விவாதங்களில் ஈடுபட தொடங்கி விட்டனர்.