Hardik Pandya join India Team – இந்திய அணியின் முன்னணி வீரர்களுள் பாண்டியா மற்றும் ராகுல் இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் ஆவார்கள்.
இவர்கள் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பெண்களை பற்றிய கூறிய கருத்தில் ஏற்பட சர்ச்சையால் இருவரையும் பிசிசிஐ இந்திய அணியில் விளையாட தடை விதித்து இருந்தது.
அதனை தொடர்ந்து, பாண்டியா “நான் யாரையும் காயப்டுத்தும் வகையில் கூறவில்லை அப்படி ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்று தனது வருத்தத்தை வெளிபடுத்தினார்.
மேலும், ராகுல் மற்றும் பாண்டியா மீதான வழக்கு விசாரிக்காமல் ஒத்திவைக்கப்படவே, பிசிசிஐ ராகுல் மற்றும் பாண்டியா மீதான தடையை திரும்ப பெற்றுக்கொண்டு அவர்கள் இந்தியாவிற்காக விளையாட உடனே அனுமதியும் வழங்கியது.
பிசிசிஐ-யின் தடை நீங்கியவுடன், பாண்டியா, நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டு விளையாட நியூசிலாந்து பறந்து சென்றார்.
மற்றும் அவர் 2-வது போட்டியில் பங்குபெற வாய்ப்பில்லாத நிலையில் 3-வது போட்டியில் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதே போல் ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடி வரும் இந்தியா ‘ஏ’ அணியில் சேர்ந்து விளையாட ஆயத்தமாக உள்ளார்.