H Raja : பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை சாதாரண மக்களை பாதிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, அதன் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் எச்.ராஜா பேசியதாவது, ” இன்று அனைவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தான் பேசி வருகின்றனர்.
அதுவும் கடந்த சில நாட்களாக லிட்டருக்கு 3 ரூபாய் என குறைக்கப்பட்டு வருகிறது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் ஓட்டை பெற இன்னும் 120 நாட்கள் இருக்கிறது, அதனால் இன்னும் ரூபாய் 15 குறைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” இவ்வாறு பேசினார்.