எல்லோரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான் என கதறி அழுதுள்ளார் ஜி பி முத்து.
GP Muthu Condolences to Friend Death : தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களாக அறிமுகமாகி வருபவர்கள் பலர் உண்டு. தற்போது டிக் டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமாக பிரபலம் அடைந்து அதன் மூலம் திரையுலகிற்கு வருபவர்களும் உண்டு.
அப்படித்தான் டிக் டாக் மூலம் செத்த பயலே நார பயலே என்ற டயலாக்கை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. தற்போது இவர் படங்களில் கூட சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அவ்வளவு ஏன் சதீஷ், சன்னி லியோன் இணைந்து நடித்துவரும் படத்தில் கூட இவர் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான். உண்மையாகவே ஆண்டவன் என ஒருவன் இல்லை. என்னோட உயிர் நண்பன் என்னை விட்டு போய் விட்டான் என தன்னுடைய நண்பரின் மறைவிற்கு கண்கலங்கி அழுதுள்ளார் ஜி பி முத்து.
ஜாதி மதம் பார்க்காமல் பழகினோம் ஆனால் இன்னைக்கு என் நண்பன் என்னோட இல்லை என நண்பனின் மறைவு குறித்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.