Government Job for Sathankulam Jayaraj Daughter
Government Job for Sathankulam Jayaraj Daughter

சாத்தான் குள வழக்கில் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சிக்கு தலைமைச் செயலகத்தில் அரசு பணிக்கான பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Government Job for Sathankulam Jayaraj Daughter : ஊரடங்கால் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தபோது கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்த மொத்தத் தொகை எவ்வளவு? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

இந்த நிலையில் உயிரிழந்த ஜெய ராஜன் மகள் பெர்சிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கியுள்ளார்.

அரசு வேலைக்கான பணி நியமன ஆணையைப் பெற்ற பெர்சி செய்தியாளர்களை சந்தித்தபோது தன்னுடைய அப்பா மற்றும் சகோதரர் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் பழனிசாமி இந்த கொடூர சம்பவத்திறகு வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.