வடிவேலுவை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்க உள்ளார் கவுண்டமணி.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. அஜித், விஜய், ரஜினி கமல் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை கொண்ட நடிகராக வலம் வருகிறார்.
இவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 49 ஓ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு உடல் நல குறைபாடு காரணமாக ஓய்வில் இருந்து வந்த கவுண்டமணி தற்போது மீண்டும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் பேயை காணோம் படத்தை இயக்கிய அன்பரசன் இயக்கத்தில் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.