Gopinath about Ajith
தல அஜித் பேட்டிகளிலோ பத்திரிகைகளிலோ பேசத்ததற்கான காரணம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் நீயா நானா கோபி நாத் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து வருபவர் கோபிநாத். இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் தலை காட்டி இருப்பார். தற்போது ஹீரோவாகவும் ஒரு படம் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பேட்டி எடுத்த போது நடந்த சுவாரஷ்ய சம்பவங்களை பற்றி கூறும்படி கேட்டுள்ளனர்.

அப்போது கோபிநாத் முதல்ல அஜித்தை பேட்டி எடுத்த போது அவர் மெதுவாக பேசினார், நான் கேமராவை நிறுத்த சொல்லி விட்டு யோசிச்சு யோசிச்சு பேசாதீங்க என கூறினேன்.

அப்போது அஜித் சொன்னார் எனக்கு அவ்வளவாக தமிழ் பேச வராது, நான் எந்தவொரு வார்த்தையையும் அர்த்தம் தெரிந்து கொண்டு தான் பேசுவேன்.

எனக்கு தமிழ் பேச வராததை பார்த்து பலர் தமிழே பேச வரல இவர் தமிழ் நடிகரா என கிண்டலடித்தனர், அதன் பிறகு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன் தமிழ் நடிகர் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

சரி பேசாமலே இருந்து விடுலாம் என்றால் பெரிய நடிகர் ஆகிட்டாரோ பேச மாட்டாரோ என்ற விமர்சனங்கள் எழுந்தது. நான் ஒவ்வொரு விசயத்தையும் நானே கற்று கொண்டு இங்கு வந்திருக்கிறேன் என பேசுகிறார்.. இது தான் அவருடைய அமைதிக்கும் காரணம் என நான் நினைக்கிறன் என கூறியுள்ளார் கோபிநாத்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.