Gold Smuggling Case Details
Gold Smuggling Case Details

கேரளா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தங்க கடத்தல் நாயகி ஸ்வப்னா தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் உட்படுத்தப்பட்டுள்ளார்.

Gold Smuggling Case Details : வெளிநாடுகளுக்கு நடிகர் நடிகைகளை அழைத்து செல்லும் வேலையில் ஈடுபட்டுவந்த ஸ்வப்னா, அந்த வேலையுடன் சேர்த்து வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வரும் வேலையையும் சேர்த்து பார்த்துள்ளார்.

அதன்பின் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ஸ்வப்னா தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார்.

அந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது. அதாவது கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையிலும் இவர் தனது தங்க கடத்தலை கச்சிதமாக கையாண்டுள்ளார்.

இது சூர்யாவோட கிரீன் இந்தியா சேலஞ்ச்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் உதவியுடன் ஸ்வப்னாவிற்கு ஊரடங்கு காலகட்டத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தும் இந்த விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வந்தே பாரத திட்டத்தின் கீழ் துபாய்க்கு இயக்கப்பட்ட விமானம் வெளிநாட்டினர் என்று கூறி 5 பேருக்கு டிக்கெட் சிவசங்கர் உதவினார் என்று அமலாக்கத் துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரது விசாரணை இன்னும் முடிவடையாமல் இருக்கும் நிலையில் இன்னும் பல சம்பவத்தின் உண்மை தன்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.