திடீரென கோகுலத்தில் சீதை சீரியல் நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை சீரியல் குழு வெளியிட்டுள்ளது.

Gokulathin Seethai Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபலமான சீரியல்களில் ஒன்று கோகுலத்தில் சீதை. டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்க நடிகை ஆஷா கவுடா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

வித்தியாசமான கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk | HD

ஆனால் கோகுலத்தில் சீதை சீரியல் நிரந்தரமாக நிறுத்தப் படவில்லை. தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சீரியல் குழு தெரிவித்துள்ளது. நாயகியாக நடிக்கும் ஆஷா கவுடாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாக இந்த சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் என சீரியல் குழு தெரிவித்துள்ளது.