kamal
நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை எனக்கூறி பிரபல தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார்.

Gnanavel Raja complaint against actor kamal – தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து அதிக படங்களை இவர் தயாரித்துள்ளார். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

வெள்ளைக்காரப் பெண் பாடும் ‘மலர்ந்தும் மலராத’ பாடல் – வைரல் வீடியோ

அதில், பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய இரண்டும் இணைந்து தயாரித்த திரைப்படம் உத்தமவில்லன். இப்படத்தை வெளியிடும் போது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கமல்ஹாசன் என்னிடம் ரூ.10 கோடி கடன் வாங்கினார். அதற்கு பதிலாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால், பல ஆண்டுகளாகியும் எனக்கு படத்திலும் நடித்துக் கொடுக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.