இடைவிடாது சர்ச்சையின் காரணமாக ஜெய்பீம் பட இயக்குனர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Gnanavel Apologies on Jai Bhim Controversy : தமிழ் சினிமாவின் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அதேசமயம் வன்னியர்கள் இடத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் திரைப்படம் ஜெய் பீம்.
இந்தத் திரைப்படத்தில் வன்னியர்களுக்கு உண்டான அக்னி கலசத்தை பயன்படுத்தியதும் வில்லனாக நடித்துள்ள போலீசுக்கு குரு மூர்த்தி என பெயர் வைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவுக்கு கடிதம் எழுதிய நிலையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி செய்யவில்லை என சூர்யா விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் வன்னியர்கள் சங்கம் சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் பட சர்ச்சை காரணமாக அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் எந்த ஒரு காட்சியின் மூலமாகவும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை இயக்கவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.