Global T20 Canada Debut :
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார்.
அவர் தற்போது க்ளோபல் டி20 கனடா 2019 தொடரில் பங்கேற்று வருகிறார். கனடாவில் நடக்கும் இந்தப் போட்டியில் டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் யுவராஜ்.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி, தனது ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார் யுவராஜ். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், வேறு நாடுகளில் நடக்கும் தொடர்களில் அவர் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டது.
க்ளோபல் டி20 கனடா 2019 தொடரின் முதல் போட்டி டொரான்டோ நேஷனல்ஸுக்கும் வாங்கூவர் நைட்ஸுக்கும் இடையில் நடந்தது. நைட்ஸின் கேப்டன் கிறிஸ் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த இந்தப் போட்டியில் நைட்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் !
4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ். அடி முதுகுப் பகுதியில் வலி இருந்ததால், முதலில் இருந்தே யுவராஜ் பேட்டிங் செய்ய திணறினார்.
27 பந்துகள் விளையாடி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் யுவராஜ். ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 17வது ஓவரை வீசினார் ரிஸ்வான் கீமா. அப்போது பேட்டிங் செய்த யுவராஜ், க்ரீஸிலிருந்து வெளியே வந்து ஆட பார்த்தார்.
எதிர்பாராத விதமாக பந்து எட்ஜ் ஆனது. அந்த எட்ஜ் கேட்ச்சை கீப்பரும் பிடிக்கவில்லை. கீப்பர் மீது பட்டபிறகு, அந்த பந்து ஸ்டம்பில் பட்டது. இதனால், களத்திலிருந்து வெளியேறினார் யுவராஜ்.
ஆனால், ரிப்ளேயில் பார்க்கும்போது யுவராஜ் சிங், அவுட் ஆகவில்லை என்று தெரிந்தது. ஆக மொத்தம், தனது கம்-பேக் முதல் போட்டியில் வித்தியாசமான முறையில் யுவராஜ் சிங், அவுட்டாகி வெளியேறியது, கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.