love

அண்ணன் தங்கை இடையே உருவான காதல் கொலை முடிந்த சம்பவம் திருவையாறு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவையாற்றில் உள்ள ஒரு கிராமத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் பெண்ணிற்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். பிளஸ் 2 வரை படித்துள்ள அப்பெண்ணும் உறவுமுறையில் அவருக்கு அண்ணனாக இருக்கும் ஒருவரும் காதலித்துள்ளனர். ஆனால், இதற்கு அப்பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, அப்பெண்ணின் தாய் கொடுத்த புகாரில் மைனர் பெண்ணை இழுத்து சென்றதற்காக அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த அவர், மீண்டும் அப்பெண்ணின் தாயிடம் சென்று வழக்கை வாபாஸ் வாங்கும்படியும், அவரின் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்க, அவரை கண்டபடி திட்டி அப்பெண் அனுப்பி விட்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இது தொடர்பாக அவருக்கும், அவரின் மகளுக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது. அப்போது, தன் காதலுக்கு குறுக்கே நிற்கும் தாயின் மீது கோபம் கொண்ட இளம்பெண் இரும்பு தடியால் அவரின் தலையில் அடித்து கொலை செய்தார்.

அதிகாலையில் தன் தாயை யாரோ கொலை செய்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி நாடகம் ஆடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளது. எனவே, போலீசார் அப்பெண்ணையும், அவரின் காதலரையும் விசாரித்து வருகின்றனர்.