கல்யாணம் பண்ணிக்கறேன் என கூறி ஆர்யா பெண் ஒருவரிடம் 80 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
German Girl Complaint on Arya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. பல வருடங்களாக சிங்கிளாகவே இருந்து வந்த இவர் சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கையும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 80 லட்சம் வரை மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
ஆர்யாவுடன் இணைந்து அவருடைய அம்மாவும் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.