ஷூட்டிங் ஸ்பாட்டில் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒத்துழைக்க முடியல என்று புலம்பும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் காயத்ரி யுவராஜ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் காயத்ரி யுவராஜ். இவர் நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருந்தாலும் அதிக அளவில் வில்லி ரோல்களிலேயே நடித்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து முடித்திருந்த சீரியல்தான் “நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் 2”.  இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி யுவராஜ். இந்த  சீரியல் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயனின் குழந்தையாக நடிக்கும் கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு காயத்ரி புலம்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் காயத்ரி குழந்தையை தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டு ‘இந்தக் குழந்தையோட கோ ஆபரேட் பண்ண முடியல, கஷ்டமா இருக்கு’ என்று வீடியோவில் புலம்பியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/CfPYUYOAo8N/?igshid=MDJmNzVkMjY=