ஜோதிகா எப்படி அப்படி பேசலாம் என போர்க்கொடி தூக்கியுள்ளார் தமிழ் நடிகை ஒருவர்.
Gayathri Raguram Comment on Jyothika Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா ராட்சசி படத்திற்காக விருது வாங்கிய போது அந்த விருது விழாவில் தஞ்சை அரசு மருத்துவமனையில் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் எந்தவித பராமரிப்பும் இல்லை எனவும் பேசினார்.
ஆனால் தஞ்சை பெரியகோவில் அவ்வளவு சுத்தமாகவும் பராமரிப்புடனும் இருக்கிறது. கோவிலை பராமரிப்பது போல மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் பராமரியுங்கள் அதற்கும் செலவழியுங்கள் என பேசினார்.
ஜோதிகாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த பேச்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகையும் பிஜேபி பிரபலமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் ஜோதிகா எந்த வித தவறான தகவலையும் பரப்பவில்லை. ஆனாலும் அவர் பேசிய அனைத்தும் உண்மை இல்லை. இன்று கொரானா நிவாரணமாக பல கோவில்கள் நிதி அளித்துள்ளன.
அப்படியான நிலையில் ஜோதிகா எப்படி கோயில்களை பற்றி அப்படி பேசலாம். அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என கூறியுள்ளார்.
அவரது ரசிகர்கள் அவர் பேசியதை நியாயப் படுத்துவது சரியல்ல, மேடையில் பேசுவதற்கு முன்னர் நாம் அதற்கு சரியானவரா என்பதை யோசியுங்கள் எனவும் அந்த பதிவில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/gayathriraguram/status/1253946934429016065?s=19
https://twitter.com/gayathriraguram/status/1253948650402660354?s=19
https://twitter.com/gayathriraguram/status/1253950948419878913?s=19
https://twitter.com/gayathriraguram/status/1253951600365670400?s=19