கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.
Gayathri Raguram Blast Kamal Haasan : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மின் விளக்குகளை அணைத்து விட்டு மக்கள் விளக்குகளை ஏற்றி தங்களின் ஒற்றுமையை வெளிகாட்ட வேண்டும் என கூறியிருந்தார்.
மோடியின் இந்த செயல்பாட்டை உலக நாயகன் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்து தொலைநோக்கு பார்வையில் நீங்கள் தோற்று விட்டீர்கள் என கூறி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள பதிவில் நீங்க ஏன் சீன அதிபருக்கும் ஜப்லி ஜமாத் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு கடிதம் எழுதக் கூடாது. அப்போ தமிழக அரசும் அதிகாரிகளும் தோற்று விட்டார்கள் என கூறுகிறீர்களா?
முதலில் என்ன பிரச்சினை என்பதை மாநில அரசிடம் முறையிடுங்கள் என கூறியுள்ளார்.
https://twitter.com/gayathriraguram/status/1247086386961723393?s=19