கெளதம் மேனனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இவர் இயக்கி இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் நடிகர் சூரியாவையோ அல்லது ரஜினியையோ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அடுத்ததாக கவுதம் மேனன் நடிகை அனுஷ்காவை வைத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படத்தை தான் இயக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால் கெளதம், சூர்யா கூட்டணியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.