அஜித் மற்றும் விஜய் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் குமார் மற்றும் விஜய். இவர்கள் இருவரையும் இயக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான இயக்குனர்களுக்கு உண்டு.
பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தினை இயக்கினார் விஜயை வைத்தும் படம் இயக்க ஒப்பந்தமாகிய நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.
இப்படியான நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? அஜித்தா? விஜயா? என கேள்வி கேட்க அவர் விஜய் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி விஜய் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
விஜய், கௌதம் மேனன் கூட்டணியில் படம் உருவாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.