நடிகையுடன் திருமணம் என பரவிய தகவலுக்கு முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்ததாக ஆகஸ்ட் 16, 1947 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுதந்திரப் போராட்டத்தை பின்னணியாக கொண்ட திரைப்படமாக திரைப்படம் உருவாகி உள்ளது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கிய இந்த திரைப்படத்தின் டீசர் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான நிலையில் கௌதம் கார்த்திக் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேட்க ஆமாம் எனக்கு இந்த வருடத்தில் திருமணம். சரியான நேரம் வரும்போது அதை அனைவருக்கும் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் என இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக கௌதம் கார்த்திக் திருமணம் குறித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.