Gautam Gambhir – இந்திய அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் கௌதம் கம்பீர். அவர் சில நாட்களுக்கு முன்னதாக அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தனது இறுதி போட்டியில் டெல்லியில் நடைபெறும் ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடி வருகிறார்.
முதலில் விளையாடிய ஆந்திர அணி 390 ரன்கள் எடுத்திருந்தது.
அதற்கு பிறகு விளையாடிய டெல்லி அணி 2 விக்கெட் இழபிர்க்கு 254 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
மேலும், இது கம்பீர் அவர்களில் இறுதி போட்டியாகும். தனது இறுதி போட்டியில் விளையாடி வரும் கௌதம் கம்பீர் இந்த போட்டியில் சதம் அடித்து தனது முத்திரையை படித்து இருக்கிறார்.
185 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றும் முதல் தர போட்டியில் அவர் அடித்த 43-வது சதம் இது ஆகும்.
கௌதம் கம்பீர், இந்தியாவின் தலைசிறந்த தொடக்க ஆட்டகாரர்களில் ஒருவர். 2004-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 9 சதம், 22 அரை சதம் என 4199 ரன்களை எடுத்து உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 2003-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் இருந்தார்.
இந்திய ஒரு நாள் போட்டிகளில் 11 சதம், 34 அரை சதம் அடித்து 5238 ரன்கள் எடுத்து சாதனை படத்தார்.
மேலும் 2011-ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டியில் 97 ரன்கள் எடுத்து அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
எப்படி இருந்தாலும், எந்த அளவிற்கு உண்மையாக விளையாடினாலும் அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு வழிக்காட்டி விலகியேயாக வேண்டும்.
மற்றும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பதும் முக்கியமானது.