சிகரெட் ரூமுக்குள் பல கேவலமான விஷயங்கள் நடக்கிறது என பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார் கஞ்சா கருப்பு.

Ganja Karupu About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் கஞ்சா கருப்பு. மிகவும் கோபக்காரராக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த இவர் இரண்டாவது வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கஞ்சா கருப்பு அதுகுறித்து எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிகரெட் ரூமுக்குள் ஒரு ஆணும் சிகரெட் அடிக்கிறான் ஒரு பெண்ணும் சிகரெட் அடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்குள் என்னென்னவோ நடக்கிறது. உன் கையை கட்டி இருந்ததால் குத்திக் கொண்டு அங்கேயே செத்திருப்பேன். பிக் பாஸே போலி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாழ்க்கை மாறும் என சொன்னார்கள் ஆனால் ஒன்றும் மாறவில்லை என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கஞ்சாகருப்பு இவ்வாறு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.