Gaja Cyclone Relief : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் நீட்ட தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் உருவாகி இருந்த கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர்,கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மோசமான அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால், மின்மாற்றி மற்றும் கம்பங்களை மாற்றியமைக்க 12,532 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து டெல்டா மாவட்ட மக்களுக்காக ரூ 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும் ஜி.வி.பிரகாஷ் டெல்டா மாவட்டங்களுக்கு 2 லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார்.
திரையுலக பிரபலங்களின் இந்த பேருதவி ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்று வருகிறது.
டெல்டா பகுதி மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென பலரும் இறைவனை வேண்டி வருகின்றனர்.