Gaja Cyclone Loss : கஜா புயலால், தமிழகத்தில் 10,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
கஜா புயலினால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில், சுமார் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன.
மேலும் மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால், மின்மாற்றி மற்றும் கம்பங்களை மாற்றியமைக்க 12,532 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, கஜா புயல் பாதிப்பால் நிவாரண நிதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22- ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கஜா புயல் சேதங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தகவல் கேட்டறிந்து உள்ளார்.
மேலும், புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு தனது இரங்களை தெரிவித்தார். ஸ்டாலினை போல திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்காக உதவி கரம் நீட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.