Kerala CM : கேரள முதல்வர் பினராயி விஜயன், கஜா புயல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் “கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்.
திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு , குடிநீர், தார்பாய், மெழுகுவத்திகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கப்படும்.
மேலும் , கேரள மாநில இயற்கை பேரிடர் மீட்பு மையம் இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்” இவ்வாறு தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் , கேரள மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அச்சமயம் தமிழக மக்கள், கேரள மக்களுக்கு பல உதவிகளை செய்தனர்.
மேலும், ஏராளமானோர் கேரள அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு நி அனுப்பி வைத்தனர்.
அதனை பெருந்தன்மையுடன் பத்திரிகைகளில் தெரிவித்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிற்கு உதவி கரம் நீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது