Gaja Cyclone Status : தீவிர புயலாக கரையை கடந்த கஜா புயல் தற்போது வலுவிழந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலானது, இன்று காலை தீவிர புயலாக மாறியது, மேலும் இன்று அதிகாலை நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
இந்த புயல் முழுவதும் கரையை கடக்க , காலை 9 மணி வரை ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீவிர புயலாக கரையை கடந்த கஜா புயல் , காலை 7.45 மணிக்கு வலுகுறைந்த புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கஜா புயலின் காரணமாக, காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.