மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Full Lockdown Update Details : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மதுரை ஆகிய பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால் இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து மதுரையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் உரையாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.