Full Lockdown in More 4 District
Full Lockdown in More 4 District

மேலும் நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Full Lockdown in More 4 District : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களுக்கு அடுத்ததாக திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

திடீர் மாற்றம்.. சென்னையில் மட்டும் முழு ஊரடங்கா?? – முதல்வரின் பரபரப்பு அறிவிப்பு!

இதனால் இந்த நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.