பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்து செருப்பு திரைப்படத்தை கண் பார்வை இல்லாதவர்கள் ரசித்து கைதட்டியை சம்பவம் நடந்துள்ளது.
Four blind watched oththa seruppu movie and clapped – தான் மட்டும் நடித்து ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் பார்த்திபனே செய்துள்ளார்.
இப்படம் கடந்த 20ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர்.
செருப்பால அடிக்கணும் என் 7-ம் அறிவை – பார்த்திபன் அதிர்ச்சி ட்வீட்.!
அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்ரிலும் இப்படத்தை பார்த்த பலரும் படத்தையும், பார்த்திபனையும் பாராட்டி டிவிட் செய்து வருகின்றனர்.
அப்படி வரும் சிறப்பான பாராட்டுகளுக்கு பார்த்திபன் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தை பெங்களூரில் பார்த்த ஒரு ரசிகர் முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.
அதில் ‘நான் பெங்களூரை சேர்ந்தவர். இப்படத்தை 2 முறை பார்த்துவிட்டேன். இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து வெளியேறவில்லை.
தியேட்டரில் கண்பார்வை இல்லாத 4 பேர் இப்படத்தை பார்த்தனர். அவர்களுக்கு பார்த்திபனை தெரியாது. ஆனால், படம் முடிந்து எழுந்து நின்று 5 நிமிடம் அவர்கள் கைதட்டினார்கள். எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை டிவிட்டரில் பகிர்ந்த ஒருவர், ‘இதற்கு மேல் என்ன வேண்டும். இந்த படத்தை சொல்ல என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நன்றி கூறியுள்ள பார்த்திபன் ‘இருந்தும் இல்லாமல் நடிப்பவர்கள் நடுவே, இல்லாமலும் இருப்பதாய் உணர்ந்து, எழுந்து பாரட்டிய உள்ளங்களுக்குக் கோடி நன்றி’ என டிவிட் செய்துள்ளார்.
இருந்தும் இல்லாமல் நடிப்பவர்கள் நடுவே, இல்லாமலும் இருப்பதாய் உணர்ந்து, எழுந்து பாரட்டிய உள்ளங்களுக்குக் கோடி நன்றி pic.twitter.com/yh4XgkdQKZ
— R.Parthiban (@rparthiepan) September 30, 2019