Fire Accident in Corona Treatment Center : ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அங்குசிக்கித் தவித்த 20 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கட்டிடத்தில் புகை வரத் தொடங்கியதும் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் பதற்றத்தில் ஹோட்டலின் முன்புறம் இருந்த பிரதான படிக்கட்டை மட்டும் பயன்படுத்தி உள்ளனர்.
கட்டிடத்தின் பின்புறமுள்ள மாடிப்படிக்கட்டில் அவர்கள் பயன்படுத்தியிருந்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம். எதிர்பாராத விதத்தில் அனைவரும் ஒரே படிக்கட்டை பயன்படுத்தியதால் தீயில் சிக்கி உயிரிழந்தனர், மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு அதிகாரிகள் கூறினார்.
தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதியை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. விபத்து குறித்து மாநில உள்துறை அமைச்சர் எம். சுசரிதா கூறுகையில், “தீ விபத்துக்கு மின்கசிவு தான் காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.
அந்த ஹோட்டலில் 40 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் 10 பேர் பணியில் இருந்தனர்” என்றார்.