அஜித், ரஜினி ஆகியோர் தமிழர்களின் வயிற்றில் அடிப்பதாக பெப்சி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
Fefsi Blast Ajith Rajini : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் அஜித், விஜய், ரஜினி, கமல் என பலர் இருக்கின்றனர். தற்போதெல்லாம் படப்பிடிப்புகளை வெளிநாடுகளுக்கு பறந்து நடத்துவதே ஸ்டைலாகி விட்டது.
இந்நிலையில் தற்போது பெப்சி அமைப்பு அஜித், ரஜினி ஆகியோரை விளாசி எடுத்துள்ளது. அஜித் நடித்து வரும் வலிமை, ரஜினி நடித்து வரும் அண்ணாத்த ஆகிய படங்கள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன.
அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்
இது குறித்து பெப்சி அமைப்பு தமிழ் நாட்டில் ஷூட்டிங் நடத்தினால் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என கோரிக்கை வைத்துள்ளது.
சிறுத்தை சிவாவின் படக்குழு தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்தினால் ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியவில்லை என கூறியுள்ளது.
இதற்கு பெப்சி அமைப்பினர் இருப்பதிலேயே அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய் தான், அவரே நெய்வேலியில் படப்பிடிப்பை நடத்துகிறார். நைட் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.
நீங்க சும்மா கதை விடாதீங்க, தமிழர்களின் வயிற்றில் அடிக்காதீங்க என கோபத்தை காட்டியுள்ளது. மேலும் அஜித் வலிமையின் அடுத்த ஷெடுலை சென்னையில் நடத்துவதாக வாக்கு கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.