murder
திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் ஒரு பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Father killed youngster who torture to his daughters – திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதி அடுத்துள்ள டி.ராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குட்டி.

இவரின் மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அவரின் காதலை ரம்யா ஏற்றுக்கொள்ளவில்லை. பலமுறை அவர் கண்ணனை எச்சரித்து ரம்யாவின் பின்னால் செல்வதை கண்ணன் நிறுத்தவில்லை.

அதோடு தொடர்ந்து ரம்யாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். எனவே, இதுபற்றி தந்தை ஜெயக்குட்டியிடன் ரம்யா கூறியுள்ளார்.

விஜய்க்கு ஜோடியா இந்த படத்துல நடிக்கணும்.. ரம்யா பாண்டியனின் ஆசையை கேட்டீங்களா..!

இதைத் தொடர்ந்து கண்னனின் தாயிடம் ஜெயக்குட்டி புகார் கூறியுள்ளார். அதன் பின்னரும் கண்ணன் திருந்தவில்லை.

தன்னை காதலிக்கும் படி ரம்யாவை தொடர்ந்து வற்புறுத்தியும், கிண்டலடித்தும் வந்துள்ளார்.

இதனால் ரம்யாவில் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, காவல் நிலையத்தில் ஜெயக்குட்டி புகார் அளித்தார். அதன் பின்னரும் கண்ணன் திருந்தவில்லை.

எனவே, ஆத்திரமடைந்த ஜெயக்குட்டி கண்ணனை நேரிடையாக கண்டித்துள்ளார். அப்போது, அவருக்கும், கண்ணனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது.

இதில், கோபம் தலைக்கேறிய ஜெயக்குட்டி அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அதன்பின் போலீசார் கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.