Fans disappointed with Suriya’s silence :
படத்தில் அவ்வளவு பேசும் சூர்யா ஏன் நிஜத்தில் மௌனம் காக்கிறார் என சமூக ஆர்வலர்களும் பொதுவான ரசிகர்களும் சூர்யாவை இணையத்தில் தற்போது வறுத்து எடுத்து வருகிறார்கள்.
பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை. லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.
தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.
நேர்கொண்ட பார்வை படத்தையும் அஜித்தை பற்றியும் புட்டு புட்டு வைத்த பாண்டே – வைரலாகும் வீடியோ.!
ஆரம்பத்தில் இவர் அறிமுகமான போது எழுந்த சூர்யாவுக்கும் தற்போது இருக்கும் சூர்யாவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு,
இவருடைய ஆரம்பகால படங்களைப் பார்த்தால் தற்போது இவர் அடைந்திருக்கும் உயரம் நிச்சயம் பிரமிப்பானது.
அண்மையில் வெளியான இந்த படத்திற்காக இவருக்கு திருப்பூரில் 215 அடிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் இது உலகிலேயே வேறு எங்கும் நடக்காத விஷயம்.
இது சூர்யா ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமையான விஷயமாக இருந்தாலும் தன் ரசிகர்கள் தனக்காக இவ்வளவு செலவு செய்வதையும் மெனக்கெடுவதையும் சூர்யா ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு எதிராக அவர் குரல் கொடுத்திருக்கலாமே? படத்தில் அவ்வளவு பேசும் சூர்யா ஏன் நிஜத்தில் மௌனம் காக்கிறார். என சமூக ஆர்வலர்களும் பொதுவான ரசிகர்களும் சூர்யாவை இணையத்தில் தற்போது வறுத்து எடுத்து வருகிறார்கள்.