100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது தவறு என பிரபல நடிகர் ஒருவர் பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fans Blast Arvind Samy Tweet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். திரையரங்குகளில் படம் பார்க்க 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில் முதல்வரை சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு விஜய் அனுமதி கேட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் மீண்டும் கொரானா பரவ அதிக வாய்ப்புள்ளது என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் தமிழ் நடிகரான அரவிந்த்சாமி தற்போதைய சூழ்நிலையில் 50% இருக்கை அனுமதியே இருந்திருக்கலாம். 100 சதவீத அனுமதி எதற்கு என பதிவிட்டுள்ளார்.
இவருடைய இந்த பதிவு விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பலரும் அரவிந்த்சாமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.
திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் கூட சிலர் அரவிந்த்சாமியை தாக்கிப் பேசியுள்ளனர்.
ஒயின் ஷாப், மால்கள் திறக்கப்பட்ட போது நீங்கள் ஏன் பேசவில்லை. இங்கெல்லாம் பரவாத குரானா திரையரங்குகளில் மட்டும் பரவுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.