சனம் ஷெட்டி பேசிய வார்த்தைகளால் சுரேஷ் சக்ரவர்த்தி குழந்தை போல அழுதது பலரையும் கலங்க வைத்துள்ளது.
Fans Blast Sanam Shetty : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் வாரத்தில் ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது போட்டியாளர்களுக்கு அரச குடும்பம் அசுர குடும்பம் என இரண்டாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த டாக்கில் சுரேஷ் சக்ரவர்த்தி தன் கையில் வைத்திருந்த பேப்பர் கோலால் சனம் ஷெட்டியை லேசாக அடித்தார்.
இதையே சாக்காக வைத்து தனது செட்டி பழைய பகையை மனதில் வைத்து சுரேஷ் சக்கரவர்த்தியை கண்டபடி போடா வாடா என திட்டினார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் சுரேஷ் Confession ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு அழுதார். இது ரசிகர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அவர் என்னதான் தப்பு செய்திருந்தாலும் அவருடைய வயதுக்கு மரியாதை கொடுத்து இருக்க வேண்டும் என சனம் ஷெட்டியை அனைவரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
சுரேஷ் மீது இதில் எந்தவித தவறும் இல்லை. சனம் செட்டி பழைய பகையை மனதில் வைத்து இவ்வாறு செயல்படுவதாக குற்றம் கூறியுள்ளனர்.